Nov 29, 2013

தொடர்கதை...!!


தொடர்கதை !!

பத்துபத்தாய் முத்துகதைகள் ! பக்கத்துக்குபத்தாய் சொட்டும்வரிகள் !
விரல்பத்தும் உனைபுரட்ட ! உன்நினைவுகள் என்னுள் அனல்மூட்ட !
கதைசொல்லும் கானகத்தில் தொலைந்துபோனேன் ! உன்இதழ்சிந்தும் வார்த்தைகளில் மௌனம்ஆனேன் !
ஒன்றுக்குஓன்று சொந்தமில்லா கதைகள்போல, பக்கத்துக்குபுதியவளாய் நீளுகின்றாய் !
அக்கம்பக்கம் கேட்டுநின்ற கதைகள்யாவும், ஒருபுத்தகத்தில் அடங்கிபோகும் மாயம்என்ன !
முடியாதகதை உண்டு "நீயும்நானும்" ! புரியாதகதைதான் பெண்ணேநீயும் !!

-சுந்தர்