Dec 6, 2013

ஆனந்தக் கூத்தன் !!







ஆனந்தக் கூத்தன் !!

அடங்காத கூட்டம் ஓன்று அடிவாரம் தனை மொய்த்து 
ஓயாத நாதமொன்று சிவநாமம் தனை மென்று 
ரீங்காரம் மீட்டுதடி என் புத்திக்குள் ஏற்றுதடி !

தில்லைக்கும் எல்லையுண்டு ஆனந்த கூத்தனுண்டு
சேர்க்காத புண்ணியமாய் ஆலகால விஷமும் உண்டு !

அம்பலத்தில் ஏறிநின்று ஆடிய ஆட்டமெல்லாம் 
சொப்பனத்தில் கலைந்ததுபோல்,
வந்த இடம் மறந்து தேடுகிறாய் மானிடமே !

சித்தனென்றும்  சிவனென்றும் ஓடுகின்ற கூடமெல்லாம் 
முக்திக்கும் பரிகாரம் உண்டென்று பிதற்றுவதேன் !

சடையேற்று ஆடி நிற்கும் ஆனந்த கூத்தன்
அவன் படியேறி பாடி நின்றேன் !
அவனுள் கண் மூடி நான் கலந்தேன் !!


-சுந்தர்.ப 

No comments: