Dec 6, 2013

யசோதைக்கும் ராதைக்கும் வண்ணம் ஒன்று !!



ஒரு பொழுதில் மடி தழுவும் பிள்ளை இரண்டு !
யசோதைக்கும் ராதைக்கும் வண்ணம் ஒன்று !

மண்ணை உண்ட கண்ணன் தான் மஞ்சம் வென்றான்   !
வென்றவன் தான் கை நீட்டி வெண்ணெய் என்றான்  !

கண்ணன்  தான் மன்னன் என்னும் கோதை உள்ளம் !  
கண்ணனா நானா என்றால் என்னவாகும் !

மடி இரண்டு விழி இரண்டு தந்த கண்ணா ன்  !
ஒரு நெஞ்சில் இருதலை அன்பை பற்று வைத்தான்  ! 

அணுவிற்கும் அனுபவம் கற்றுத்தந்தான்!
நாடகம் அரங்கேற  இன்றோர் மேடை கொண்டான் ! 

ஒருபொழுதும்  கலங்கா கோதை உள்ளம்
இரு பொருள் வரியாய் திண்ணமாகும் !!


-சுந்தர்.ப 

No comments: