Dec 6, 2013

கடல் மேல் குமிழிகள் !!



கடல் மேல் குமிழிகள் !!

வெண்ணிலவும் மின்னொழியும் உரசிக்கொள்ளும் அந்நொடியில்
அந்தி வானம் துயில் களையும் நடுநிசியில்,

வாடை வாசம் மாறா தென்றல் எனை சீண்ட - வெண்ணிற 
கடற் குமிழிகள் என் நகக்கண்ணின் இமை திறந்தன !!

முலுமதியின் பிரதிபலிப்பாய் தனி கடலாய் நான் இருந்தேன் !!
நுரை சிந்தும் மணல் வெளியல் !

காற்று வாங்க கால் பதித்தேன் - மறந்தது அந்த 
காகிதமும் என் பேனா இதழும் !!

காதல் சொல்ல யாரும் இல்லை ,
காதல் சொன்ன பெண்ணும் இல்லை !!

வந்ததெலாம் வாங்கி கொண்டால்
ஏந்தி கொள்ள யாரும் இல்லை !!

தந்ததை நினில் கரைத்து விட்டு வெறும் கையில்
வீடு சென்றேன் என் கடல் நீரே !!    

-சுந்தர்.ப 

No comments: