Sep 10, 2014

என் பெயர் இல்லாக் காதல் அம்மா !!





















கார்கோட மேகம் ஓன்று சீறிச் சிந்தும் திவளைகளில்
சிலிர்த்தது இந்த காதல் விந்து !

இருள் தின்னும் அந்தி நுழைவுக்குள் நெஞ்சுறைய
கொட்டித் தீர்த்த  மழைக்காலம் ஓன்று !

ஒரு திங்கள் கூத்தாடிகளின் படையெடுப்பாய்,
எனை மொய்த்த காதல் ஈசல் !

நெஞ்சனைக்க காத்து நின்ற காலம் யாவும்,
மூச்சிறைக்க முட்டிக்கொண்ட நேரம் அது !

மலர் உண்ணும் காதல் வண்டு ஓன்று செவி நுழைய
துடித்தனன் காளை உள்ளம் !

துயிழாது, துவளாது, தூரத்துப் பாவை -
விழி உண்ணும் விரதம் கொண்டு !

வண்டு உடைத்த மாங்கனியாய் காதல் கனிய,
அவள் அந்தரங்க மனக்குகையில் மாட்டிக்கொண்ட
பேதை வண்டினம் நான் !

தேன் உண்ணும் தொழில் மறந்து, மலர் உண்ணும்
வண்டானால், ஊடல் இன்றி போவதுண்டோ !

அவள் ஊடல் என்னும் மொட்டு உதிர்க்க,
மோகம் தான் கூடுது இங்கே !

அவள் வண்டு உண்ணும் மலர் ஆனால்,
எனை உண்ணும் இதழ் தேன் சுவை தானே !

ஊடல் கொஞ்சம், கூடல் கொஞ்சம்
மாறி மாறித் தேடிக்கொண்டேன் !

பேடை அவள் காதலுக்கு கார்முகில்
தூது சொன்னேன் !

காலம் தாண்டி கூடி நின்றும்,
காதல் என் கையில் அன்றோ !

அறியக் காலம் கொண்டு அலைந்து,
தேடிக் காதல் இன்று !

எனைக் கொஞ்சம் அவள் சேர்த்து,
எனில் கொஞ்சம் அவள் சேர்ந்து !

கூடாத மஞ்சம் கூட,
அவள் வாசம் சூடிக் கொள்ள !

சேரா திசை எட்டும்,
காதல் சிந்தி காதல் ஆகும் !

மதியை ஒரு மகள்,
கார்குழல் சூடி நின்றாள் !

தேக விருந்துண்ணும் சூத்திரம்
தேடிச் சொன்னால் !

முத்து ஒழுகும் மஞ்சத் திறவுகள்,
தனில் ஏந்தும் மாதுளையே !

அவள் மாடக் கூடலிலே,
மோகம் தின்னுத் தெளிந்தேன் !

காணும் திசை எங்கும் நான் விதைத்தேன்,
காதல் இதழ் செழிக்க அவள் தேன் தெளித்தாள் !

காதல் எனும் கொட்டகைக்குள்,
என் காதல் அடைப்பதற்க்கில்லை !

மோகக் தியான காமம் என்னும்,
அஞ்சரைக்கும் சொந்தம் இல்லை !

உயிர் ஜெனிக்கா குழந்தை போல,

என் பெயர் இல்லாக் காதல் அம்மா !! 


சுந்தர்.ப

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் இரசித்து படித்தேன் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-